/* */

காரைக்குடியில் பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய போலீசார் - பரபரப்பு

காரைக்குடியில், பாஜக மற்றும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி கொடி கம்பங்களை காவல்துறையினர் அகற்றியதால், பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

காரைக்குடியில் பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய போலீசார் - பரபரப்பு
X

காரைக்குடியில், அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருந்த பாஜக, தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சி கொடி கம்பங்களை அகற்றிய காவல்துறையினர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் கொடிக்கம்பம், 2014 முதல் இருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, நன்னடத்தை விதிமுறைகளால் அக்கொடி கம்பத்தை அதிகாரிகள் அகற்றினர்.

சமீபத்தில், அதே பகுதியில் பாஜகவினர் சில நாட்களுக்கு முன், அனுமதியின்றி கொடியேற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஏற்கனவே கொடிக்கம்பம் இருந்த இடத்தில், தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சியினர், கொடிக்கம்பம் நட்டனர். இன்று, அதில் கொடியேற்ற இருந்த நிலையில், இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தனர்.

இதனிடையே, அங்கு இன்று பாஜகவினரும் திரண்டனர். இதனிடையே, அனுமதியின்றி நடப்பட்ட பாஜக மற்றும் தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சி ஆகிய 2 கொடிக் கம்பங்களையும் காவல்துறை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இரு கொடிக்கம்பங்களும், அடுத்தடுத்து இருப்பதால், வருங்காலங்களில் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக அகற்றியதாக, என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 29 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!