/* */

ஏற்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறை: 5 மணி நேரத்திற்குப்பின் அகற்றம்

சேலம் ஏற்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறையை 5 மணி நேர போராட்டத்திற்கு பின் நெடுச்சாலைத்துறையினர் உடைத்து அகற்றினர்.

HIGHLIGHTS

ஏற்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறை: 5 மணி நேரத்திற்குப்பின் அகற்றம்
X

ஏர்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறையை அகற்றும் நெடுஞ்சாலைத்துறையினர்.

சுற்றுலா தளமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் ஏற்காடு மலைப்பகுதியில் மட்டும் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய அருவிபோல் தண்ணீர் கொட்டுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக அடிவாரத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பாதையில் பாறை ஒன்று உருண்டு விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் அதிகாலை முதல் 5 மணி நேரம் போராடி பாறையை உடைத்து அகற்றினர். இந்தப் பணிகள் காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழைக்காலம் என்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் மலைப்பாதையை கடக்க வேண்டுமென வருவாய் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Updated On: 24 Sep 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  3. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  4. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  5. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  6. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  7. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  8. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  9. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  10. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?