/* */

இன்று முதல் இ பாஸ்: வாகன தணிக்கை தீவிரம்

இன்று முதல் மீண்டும் இ பாஸ் நடைமுறை அமலுக்கு வந்ததையடுத்து சேலத்தில் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கை

HIGHLIGHTS

இன்று முதல் இ பாஸ்:  வாகன தணிக்கை தீவிரம்
X

ஊரடங்கின்போது பொதுமக்கள் பயணம் செய்வதற்கு இன்று முதல் மீண்டும் இபாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையான மல்லூரில் போலீஸார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இ பாஸ் வைத்துள்ள வாகன ஓட்டிகள் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இ பாஸ் இல்லாத வாகன ஓட்டிகளை மாவட்ட எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதேபோல சேலம் மாவட்டத்தில் மகுடஞ்சாவடி, தொப்பூர், ஆச்சாங்குட்டப்பட்டி, தலைவாசல் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளிலும் போலீஸார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

Updated On: 17 May 2021 12:38 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!