/* */

கொரோனோ தடுப்பு முறைகள் பின்பற்றப்படுகிறதா? பள்ளியில் கலெக்டர் ஆய்வு

கொரோனோ நோய்த்தொற்று தடுப்பு வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

HIGHLIGHTS

கொரோனோ தடுப்பு முறைகள் பின்பற்றப்படுகிறதா? பள்ளியில் கலெக்டர் ஆய்வு
X

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசு உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. சேலம் மாவட்டத்தில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளதையொட்டி, சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசு அறிவித்துள்ள கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகள் முழுமையாக பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருகின்றதா என்பதை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட ஆய்வில் பள்ளியின் வகுப்பறைக்குள் சென்று மாணவர்களிடம் சரியான முறையில் நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளனவா என்பதை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உடனிருந்தார்.

Updated On: 1 Sep 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...