முதல்வர் சேலம் வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு

Salem News Today: சேலத்திற்கு தமிழக முதல்வர் வருவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
முதல்வர் சேலம் வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு
X

சேலத்திற்கு தமிழக முதல்வர் வருவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார்.

Salem News Today: சேலம் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க தமிழக முதல்வர் வருகைதரவுள்ளதையொட்டி, சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் விழா முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சேலம் மாவட்டத்திற்கு வரும் 11ம் தேதி தமிழக முதல்வர் வருகைதந்து சேலம், அண்ணா பூங்கா வளாகத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்து, சேலம், பழைய பேருந்து நிலையத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்க உள்ளார்.

மேலும், இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டத்தினைத் தொடங்கி வைத்து, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 1 இலட்சம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள். இதனைத்தொடர்ந்து, அரசு அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டமும் நடைபெறவுள்ளது.

பின்னர், 12.06.2023 காலை 8 மணி அளவில் காவிரி டெல்டா பகுதி விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்கள். இதற்குரிய முன்னேற்பாடு பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் விழா நடைபெறவுள்ள இடத்தினை ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி உட்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 30 May 2023 2:55 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா