/* */

ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம்

ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 17,500 பருத்தி மூட்டைகள் 5 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை.

HIGHLIGHTS

ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம்
X
ஏலத்திற்கு கொண்டுவரப்பட்ட பருத்தி மூட்டைகள்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் செயல்பட்டு வரும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இச்சங்கத்திற்கு ஆத்தூர் மட்டுமின்றி கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திட்டக்குடி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வருகிறார்கள். இங்கு கொண்டு வரப்படும் பருத்தி மூட்டைகளை திருப்பூர், தேனி, காங்கேயம், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பருத்தி வியாபாரிகள் இங்கு வந்து மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தி மூட்டைகளை கொள்முதல் செய்து செல்கிறார்கள்.

இந்நிலையில் ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டு வந்த 17,500 பருத்தி மூட்டைகள் சுமார் 5 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் பி.டி., ரகம் பருத்தி ஒரு குவிண்டால் 5,800 முதல் 10,900 ரூபாய்க்கும், டி.சி.ஹச்., ரகம் பருத்தி ஒரு குவிண்டால் 8,200 ரூபாய் முதல் 16,089 ரூபாய்க்கும், கொட்டு பருத்தி குவிண்டால் 3,560 ரூபாய் முதல் 6,509 ரூபாய் வரை மறைமுக ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் பருத்தி மூட்டைகளை கொள்முதல் செய்தார்கள்.

இதனிடையே பருவ மழைக்காரணமாக பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் மூன்றாயிரம் வரை விலையேற்றம் அடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே பருத்தி ஏலத்தில் கலந்து கொள்வதற்காக வரும் விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அதிகாரிகள் அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிகாலையில் ஏலத்தில் பங்கேற்க வரும் விவசாயிகள் கடும் குளிரில் நடுங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் ஓய்வெடுப்பதற்க்கென அரங்கம் இல்லாததாலும் போதிய கழிப்பிட வசதி இல்லாததால் திறந்த வெளியிலேயே விவசாயிகள் கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட வேளாண் துறை நிர்வாகம் விவசாயிகளின் நலன் கருதி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 11 Jan 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...