ஆற்காடு: உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பறிமுதல்..

ஆற்காடு அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆற்காடு: உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பறிமுதல்..
X


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பக்கம் தனியார் கல்லூரி அருகே தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆரணியில் இருந்து ஆற்காட்டை நோக்கி வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது, காரில் உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக காரில் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் ஆற்காடு தாஜ்புரா பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (33) எனவும், இவர் வேலூரில் உள்ள ஹூண்டாய் கார் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் ஆரணியில் உள்ள வாடிக்கையாளரிடம் புது காரை ஒப்படைத்து அதற்கான நிலுவைத் தொகையான ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.


அந்தப் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர்,ரூபாய் ஓரு லட்சத்து 69 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சியிடம் ஒப்படைத்தனர். அந்த பணம் பின்னர் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது

Updated On: 4 March 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்