/* */

அரக்கோணம் அருகே ஏரியில் குளித்த ஓட்டல் தொழிலாளி நீரில் மூழ்கி பலி

அரக்கோணம் அருகே ஏரியில் குளித்த ஓட்டல் தொழிலாளி நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

அரக்கோணம் அருகே ஏரியில் குளித்த ஓட்டல் தொழிலாளி நீரில் மூழ்கி பலி
X

ஏரியில் உயிரிழந்த ஓட்டல் தொழிலாளி

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சித்தேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்( 24), திருமணமாகாதவர், இவர் அதே பகுதியில் உள்ள உணவகத்தில் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்,அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் மதன் என்பவருடன் சேர்ந்து தற்போது நிரம்பி உள்ள அவ்வூர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடிரென ஸ்ரீதர் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.அதைக் கண்டு திடுக்கிட்ட மதன் அதிர்ச்சியில் அருகில் மீன் பிடித்துக் கோண்டிருந்தவர்களை அழைத்து நீரில் மூழ்கிய ஸ்ரீதரைக் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார்

உடனே வந்த அவர்கள் ஏரியில் குதித்து ஸ்ரீதரை காப்பாற்றமுயன்றனர். அதற்குள் நீரில் மிதந்த அவரை மீட்டு கரைக்கு கொண்டுவந்து பார்த்தனர் அதில் ,ஸ்ரீதர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

மேலும், இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலூக்காப் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஸ்ரீதரின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 15 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை