/* */

இ- பாஸ் இல்லாத சுற்றுலாபயணிகள் தடுத்து நிறுத்தம்

இ- பாஸ் இல்லாத சுற்றுலாபயணிகள் தடுத்து நிறுத்தம்
X

இராமேஸ்வரத்தில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் முழு பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர். இ பாஸ் இல்லாத சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ளதால் மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டுமென சுகாதாரத்துறை மற்றும் காவல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் இராமேஸ்வரம் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டு மாஸ்க் அணிந்துள்ளனரா என கண்காணிக்கப்படுகிறது.

மாஸ்க் அணியாத சுற்றுலா பயணிகளுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் பைக்குகளில் வருவோர், மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா, கேரளாவில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ பாஸ் வைத்திருப்பவர்கள், மட்டுமே இராமேஸ்வரத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இ பாஸ் இல்லாத சுற்றுலாப் பயணிகளை சுகாதாரத்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Updated On: 13 April 2021 11:16 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  2. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  4. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  5. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  9. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  10. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!