/* */

குடும்ப தகராறில் மனைவி குத்திக் கொலை: கணவனுக்கு ஆயுள் தண்டனை

கமுதி அருகே குடும்ப தகராறில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குடும்ப தகராறில் மனைவி குத்திக் கொலை: கணவனுக்கு ஆயுள் தண்டனை
X

பைல் படம்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள முத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் காத்தழகு கருப்பணன் மகன் முத்துக்குமார்(வயது26). இவரின் மனைவி ராணி என்ற அமுதராணி(24). முத்துக்குமார் அடிக்கடி குற்ற வழக்குகளில் சிறை சென்று வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி, முத்துக்குமார் மனைவியை சைக்கிளில் சந்தைக்கு செல்லலாம் என்று அழைத்து சென்றுள்ளார். கமுதியில் இருந்து பெருமாள் தேவன்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி மனைவி அமுதராணியை கொலை செய்தார். இதுதொடர்பாக அமுதராணியின் தந்தை திருச்சுழி அம்மன்பட்டியை சேர்ந்த பூமிநாதன் அளித்த புகாரின் அடிப்படையில், கமுதி போலீசார் வழக்குபதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை இராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சுபத்ரா மனைவியை கொலை செய்த முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Updated On: 12 Nov 2021 11:47 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...