/* */

மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருமயத்தில் மாட்டு வண்டி பந்தயம்

திருமயம் அருகே மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ரசித்த பொதுமக்கள்.

HIGHLIGHTS

மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருமயத்தில் மாட்டு வண்டி பந்தயம்
X

அரண்மனைபட்டியில் ஸ்ரீகுருந்துடைய அய்யனார் கோவில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 

திருமயம் அருகே மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ரசித்த பொதுமக்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அரண்மனைபட்டியில் ஸ்ரீகுருந்துடைய அய்யனார் கோவில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 34 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

போட்டியில் பெரிய மாட்டு வண்டியில் 10 ஜோடியும் சிரிய மாட்டு வண்டியில் 24 ஜோடி வண்டிகள் என பந்தயம் இரு பிரிவுகளாக நடைபெற்றது. அரண்மனைபட்டியில் துவங்கிய பந்தயம் கோனாபட்டு வரை 8 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது போட்டியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

சாலையில் துள்ளிக்குதித்து போட்டி போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம், கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.

Updated On: 3 March 2022 1:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....