Begin typing your search above and press return to search.
கொரொனா தடுப்பூசி விழிப்புணர்வு ஓவியம் : புதுக்கோட்டை சாலையில்
கொரொனா தடுப்பூசி விழிப்புணர்வு ஓவியம் புதுக்கோட்டை சாலையில் வரையப்பட்டுள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
HIGHLIGHTS
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மச்சுவாடி அருகே சாலையில் கொரோனா தடுப்பூசியைப் பற்றி சாலையில் தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியம் வரவேற்பை பெற்றுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. வரையப்பட்ட அந்த ஓவியத்தில் போக்குவரத்து காவலர் கையில் தடுப்பூசியை ஒரு பக்கம் வைத்துக் கொண்டும், மறுபக்கம் முகக்கவசம் கையில் வைத்துக் கொண்டு இருப்பது போல் வரையப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைவரும் தடுப்பு ஊசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்.
அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்கின்ற வசனங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த ஓவியத்தை ரசித்து பார்த்து செல்கின்றனர்.