/* */

புதுக்கோட்டையில் இன்று பள்ளிகள் திறப்பு: இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி மாணவர்களை வரவேற்றனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் இன்று பள்ளிகள் திறப்பு: இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு
X

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போக்குவத்து கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது அடுத்து தமிழக அரசு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என உத்தரவு அளிக்கப்பட்டதை அடுத்து இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1967 அனைத்து வகை பள்ளிகளும் கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டது.

இதனையடுத்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் பள்ளி திறக்கப்பட்டதையடுத்து உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அப்போது ஆசிரியர்கள் மாணவிகளுக்கு மலர் கொடுத்தும் கிருமிநாசினி மற்றும் முக கவசம் ஆகியவை கொடுத்து மாணவிகளை வரவேற்றனர்.

மேலும் மாணவிகள் அவரவர் கொண்டுவந்துள்ள குடிநீர் மற்றும் உணவுகளை மற்றவர்களுக்கு பரிமாற வேண்டாம் என்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் இருந்தால் தெரிவிக்க வேண்டுமென அறிவுரை வழங்கி மாணவர்களை உள்ளே அனுப்பி வைத்தனர்.

மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் வீட்டிலிருந்து படிப்பதைவிட பள்ளிக்கு வந்து படிப்பது தான் மிகவும் பிடித்ததாகவும் என்று தெரிவித்தனர்.

Updated On: 1 Feb 2022 6:06 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  5. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  7. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  8. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...