/* */

வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஆளில்லா ரயில்வே சுரங்கப் பாதையை மூடுவது. ஏற்கெனவே செயல்பட்டு வந்த ரயில்வே கேட்டை திறப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது

HIGHLIGHTS

வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்ட  பொதுமக்கள்
X

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே துடையூர் ரயில்வேகேட்டை திறந்து வைத்து செல்ல முயன்ற வருவாய் கோட்டாட்சியர் ஜீப்பை பொதுமக்கள் முற்றுகையிட்டு சிறைபிடிப்பு

புதுக்கோட்டை அடுத்த நார்த்தாமலை அருகே துடையூர் ரயில்வே கேட்டை திறந்து வைத்து செல்ல முயன்ற வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தமலை அருகே துடையூரை சேர்ந்த டாக்டர் சத்யா, ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி இருந்த நீரில் மூழ்கி நேற்று முன்தினம் நள்ளிரவில் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்றுபொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.இதையடுத்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையில் ரயில்வே துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் மற்றும் துடையூர் ஊர் பிரமுகர்கள் மற்றும் முக்கியபிரமுகர்கள் கலந்துகொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை கீரனூரில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில், துடையூர் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே சுரங்கப் பாதையை மூடுவது. அதேபோல் ஏற்கெனவே செயல்பட்டு வந்த ரயில்வே கேட்டை திறப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி ,ரயில்வே துறை அதிகாரிகள் ,காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள்ல் துடையூர் பகுதிக்கு நேரில் வந்து ரயில்வே கேட்டை திறந்து வைத்தனர். பின்னர், வருவாய் கோட்டாட்சியர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற போது பொதுமக்கள் அவரது ஜீப்பை முற்றுகையிட்டு சிறைப்பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊர் பிரமுகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டு சிறை பிடித்தவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவாய் கோட்டாட்சியரை அனுப்பி வைத்தனர்.

Updated On: 19 Sep 2021 10:24 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!