/* */

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் தண்ணீர் வராததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

HIGHLIGHTS

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மருங்கூரனி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதியிலுள்ள பெண்கள் மற்றும் இளைஞர்கள் சாலையில் காலி குடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கந்தர்வகோட்டை பகுதியிலிருந்து கரம்பக்குடி புதுக்கோட்டை கல்லாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்துகளில் செல்ல முடியாமல் தவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கந்தர்வக்கோட்டை காவல்துறையினர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 27 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  2. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  3. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  6. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...