திருவருள் பேரவை அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் விழா
அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துகளை கூறினர்
HIGHLIGHTS
திருவருள் பேரவை அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினர்.
நாடு முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று சிறப்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கடந்த இரண்டு வருடங்களாக கிறிஸ்துமஸ் பெருவிழா கொரோனா வைரஸ் பெருந்தோற்று காரணமாக கொண்டாடாமல் இருந்து வந்த நிலையில், தற்போது வைரஸ் தொற்று குறையத் தொடங்கிய நிலையில், இன்று நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன்று காலை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி கூட்டத்தில் புதுக்கோட்டை திருவருள் பேரவை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடும் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துகளை கூறினர்.இதில் இந்து-முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டு கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் திருவருள் பேரவை புதுக்கோட்டை மாவட்ட அனைத்து சமுதாய கூட்டமைப்பின் நிர்வாகிகள் சம்பத்குமார், மருத்துவர் சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்