/* */

புதுக்கோட்டையில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்கள் கைது

புதுக்கோட்டையில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்கள் கைது
X

புதுக்கோட்டையில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினர்.

புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 67). இவரது மகள் வெண்ணிலாவுக்கு கடந்த மார்ச் மாதம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி இரவு அவரது வீட்டில் மர்ம ஆசாமிகள் புகுந்து 121 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இது தொடர்பாக புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ் மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜன், மாரிமுத்து, காமராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

திருமண வீட்டில் நகைகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெண்ணிலாவின் சகோதரர் கனடாவில் டாக்டராக பணியாற்றி வருகிற நிலையில் அவரும் திருமணத்திற்காக வந்திருந்தார்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் மதுரை அகதிகள் முகாமை சேர்ந்த சிவராஜன் (46), மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த தங்கபாண்டி (34), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த சதீஷ் என்கிற ஸ்டீபன் (38) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 61 பவுன் நகைகளை தங்க கட்டிகளாக மீட்டனர். கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Updated On: 30 April 2022 5:38 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?