/* */

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு உண்டியல் சேமிப்பை வழங்கிய 2ம் வகுப்பு மாணவி

தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு, தனது உண்டியல் சேமிப்புத் தொகையை வழங்கிய 2ம் வகுப்பு மாணவியை பலரும் பாராட்டினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஓவியா; இவரது மகள் சீர்த்தி கண்ணம்மா. 6 வயதுடைய இவர் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். கொரோனா தொற்றால் மோசமான சூழ்நிலையை பலரும் கடந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறப்படுகிறது.

அவ்வகையில், இரண்டாம் வகுப்பு மாணவி சீர்த்தி, தனது உண்டியல் சேமிப்பு பணத்தை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம், நேரடியாக வந்து நிவாரண நிதியாக வழங்கினார். அதில் 1280 ரூபாய் இருந்தது. சிறுமியின் இச்செயல், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆட்சியர் உள்பட அனைவரும், சிறுமியை பாராட்டினர்.

இதுகுறித்து, சிறுமி சீர்த்தி கூறுகையில், அம்மா 3 வயதில் எனக்கு உண்டியல் தந்தார்கள். அவர் தரும் சிறு தொகையை இதில் சேமித்து வந்தேன். பலருக்கும் உதவட்டுமே என்று, இந்த தொகையை, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கினேன் என்றார்.

Updated On: 24 Jun 2021 2:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!