Begin typing your search above and press return to search.
மக்கள் நீதி மையம் கட்சி மாவட்ட செயலாளர் திடீர் விலகல்
புதுக்கோட்டை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் இன்று கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து திடீரென்று விலகினார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தின் மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து தொடர்ந்து விலகி வரும் நிலையில், இன்று புதுக்கோட்டை மத்திய மக்கள் நீதி மைய கட்சியில் மாவட்ட செயலாளரும் விராலிமலை தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்ட சரவணன் மக்கள் நீதி மைய கட்சியில் இருந்து மாவட்டச் செயலாளர் பொறுப்பு, உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் இன்று விலகினார்.
தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி வருவது மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறனர்.