/* */

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வுசெய்த வருவாய் துறை

கீரனூர் அருகில் மேல புதுவயல் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வட்டாட்சியர் பெரியநாயகி திடீர் ஆய்வு

HIGHLIGHTS

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வுசெய்த வருவாய் துறை
X

கீரனூர் அருகே நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்த வட்டாட்சியர் பெரியநாயகி

குளத்தூர் தாலுகா கீரனூர் அருகில் மேல புதுவயல் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனவும், நெல் கொள்முதல் செய்வதில் எடை அளவு சரியாக உள்ளதா, நெல்கொள்முதல் ரகங்கள் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான தேவையான இடவசதி உள்ளதா என்று பார்வையிட்டார்.

மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விடாதவாறு தார்பாய்களை கொண்டு மூடி வைக்கவும், அதிகப்படியான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டால் உடனடியாக அவற்றை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் குழு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கு குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி உத்தரவிட்டார்.


Updated On: 19 July 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  5. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  7. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  8. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...