Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டையில் 7 வெள்ளாடுகளை கடித்து குதறி கொன்ற வெறிநாய்கள்
புதுக்கோட்டையில் 7 வெள்ளாடுகளை கடித்து குதறி கொன்ற வெறி நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மைக்கேல்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (44) விவசாயி. நேற்று இரவு இவர் வீட்டில் வெள்ளாடுகளை கட்டிவிட்டு தூங்கி கொண்டிருந்தார்.
காலையில் எழுந்து பார்த்த பொழுது ஆடுகள் கடித்து குதறப்பட்டு கிடந்தது. ஏழு ஆடுகளின் கழுத்தை கடித்து வெறி நாய்கள் ரத்தம் குடித்துள்ளது. இதனால் வெள்ளாடுகள் இறந்து கிடந்ததைப் பார்த்த ஏழு ஆடுகளின் மதிப்பு 65 ஆயிரம் ரூபாய் ஆகும். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை வெறிநாய்கள் கடித்து பலியாவதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..