/* */

பெண்ணிடம் தாலிக்கொடி பறிக்க முயற்சி :தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

பெரம்பலூரில் பெண்ணிடம் தாலிக் கொடியை பறிக்க முயன்ற நபரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

HIGHLIGHTS

பெண்ணிடம் தாலிக்கொடி பறிக்க முயற்சி :தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
X
பெரம்பலூர் அருகே தாலி செயினை பறிக்க முயன்ற வாலிபர்கள்.

பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி மனைவி பார்வதி ( 50 ) . தனது , வயல் காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார் . அப்போது , அடையாளம் தெரிந்த நபர்கள் பார்வதி அருகில் வந்து அவரது கழுத்தை பிடித்து கொண்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி கொடியை பறிக்க முயற்சி செய்தனர் .

பார்வதி சத்தம் போட்டார் . அப்போது , 2 நபர்களும் ஓடி அங்கே இருந்த காரில் ஏறி தப்பி சென்று விட்டதாகவும் , இவர் போட்ட சத்தத்தினால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து என்னவென்று விசாரித்து புதுநடுவலூர் கிராம மக்கள் சாலையின் குறுக்கே கற்களை போட்டு காரை வழிமறித்து காரில் வந்தவர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

விசாரணையில் , எளம்பலூர் அருகே உள்ள தண்ணீர் பந்தலை சேர்ந்த , ராஜா மகன் வெங்கடேஷ் ( 21 ) , சுப்பிரமணி மகன் குமரேசன் ( 23 ) , சுரேஷ்குமார் ( 26 ) என்பது தெரியவந்தது . அவர்களை செல்லியம்பாளையம் மாரியம்மன் கோவிலில் பிடித்து வைத்தனர் .

இது குறித்து , தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை பிடித்து , காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் . மேலும் , சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து நடத்திய விசாரணையில் , அந்த கும்பலை சேர்ந்த அதே ஊரை , சேர்ந்த , கோபு மகன் கண்ணதாசன் என்பவரையும் பிடித்து அவரையும் பெரம்பலூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றர் .

ஆடு மேய்த்த பெண்ணிடம் தாலி கொடியை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Updated On: 8 Nov 2021 5:00 PM GMT

Related News