/* */

எஜமானனை இழந்த சோகம்-ஆற்றுவார் இன்றியும் தேற்றுவார் இன்றியும் பரிதவித்த நாய்

பெரம்பலூர் மாவட்டத்தில் இடிதாக்கி உயிரிழந்த தனது உரிமையாளரின் உடலை நாய் சுற்றி வந்தது அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது.

HIGHLIGHTS

எஜமானனை இழந்த சோகம்-ஆற்றுவார் இன்றியும் தேற்றுவார் இன்றியும் பரிதவித்த நாய்
X

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

எஜமானனை இழந்த பரிதவிப்பை ஆற்றுவார் இன்றியும் தேற்றுவார் இன்றியும் பரிதவித்த நாய்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இடிதாக்கி உயிரிழந்த தனது உரிமையாளரின் உடலை நாய் ஒன்று சுற்றிவந்தது அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது. பெரம்பலூர் பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(55). ஆடுமேய்க்கச் சென்ற இவர் இடிதாக்கி இறந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலை கட்டிலில் கிடத்தி உறவினர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர்.

அப்போது ராமச்சந்திரனின் வளர்ப்பு பிராணியான நாய் அவரது உடலை சுற்றியும், தாவி குதித்தும் தனது எஜமானனை இழந்த பரிதவிப்பை வெளிப்படுத்தியது. தொடர்ந்து ராமச்சந்திரன் உடலை எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பும் வரை ஆற்றுவார் இன்றியும் தேற்றுவார் இன்றியும் அந்த இடத்தை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்தது காண்போரை கண்கலங்க வைத்தது.


Updated On: 4 Jun 2021 5:49 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...