/* */

பெரம்பலூரில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி

பெரம்பலூரில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி சக காவலர்களால் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் உயிரிழந்த  தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி
X

உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த ராஜேந்திரன் என்பவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.

இந்நிலையில் அவருடன் பணியில் சேர்ந்த 1993-ம் பேட்ச் காவல்துறையினர் தமிழகம் முழுவதும் ஒன்றிணைந்து ராஜேந்திரன் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் காக்கும் கரங்கள்-1993-ம் பேட்ச் சார்பாக ரூபாய் 7,27,500/- சேகரித்து அதனை பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி தலைமையில் ராஜேந்திரன் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ,காவல் ஆய்வாளர் மற்றும் 1993-பேட்ச் காவல்துறையினர் என பலர் கலந்து கொண்டார்கள். மேலும் உதவி தொகை செய்த 1993-பேட்ச் காவல்துறையினரின் சேவை மனப்பான்மையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியதுடன், தமிழகம் முழுவதும் உள்ள 1993-பேட்ச் காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்தார்.

Updated On: 3 March 2022 4:44 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?