/* */

உதகையில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்

உதகை அரசு ரோஜா பூங்காவில் பூத்துள்ள பூக்கள் பார்வையாளர்கள் இன்றி பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.

HIGHLIGHTS

உதகையில்  பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்
X

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாத கோடை சீசனில் உதகை ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா பூக்களை காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில் இந்த ஆண்டு பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனை முன்னிட்டு உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் தோட்டக்கலைத் துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் கோடை விழா நடைபெறும். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கொரோனா பாதிப்பால் சீசனுக்காக தயார் செய்யப்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளதால் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றது.

இதில் குறிப்பாக மூன்றாயிரம் ரக ரோஜாக்களை கொண்ட உதகை அரசு ரோஜா பூங்காவில் சில மாதங்களுக்கு முன்பு கோடை சீசனுக்காக கவாத்து செய்யப்பட்டு பூங்கா பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பூங்காவில் வண்ண வண்ணமாக ரோஜா பூக்கள் அதிக அளவில் பூத்து குலுங்குகின்றன. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பார்வையாளர்களின்றி பூங்கா கலையிழந்து காணப்படுகிறது.

Updated On: 28 April 2021 6:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!