Begin typing your search above and press return to search.
இரண்டு நாள் பயணமாக உதகைக்கு வந்த கவர்னர்
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
HIGHLIGHTS
நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். பின்னர் கோவையிலிருந்து கோத்தகிரி வழியாக உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று மாலை வந்தடைந்தார். தமிழக ஆளுநர் வருகை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பிற மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.