/* */

பிபின் ராவத்திற்கு அஞ்சலி: நீலகிரி மாவட்டத்தில் இன்று கடையடைப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

பிபின் ராவத்திற்கு அஞ்சலி: நீலகிரி மாவட்டத்தில் இன்று கடையடைப்பு
X

நீலகிரி மாவட்டம், குன்னூர் மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். நாட்டையே நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த விபத்தில், உயிரிழந்தவர்களுக்கு, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில், 13 ராணுவ வீரர்களின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகளை அடைத்து வியாபாரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, மாவட்டத்தில் கடைகள், ஓட்டல்கள் உள்பட வணிக நிறுவனங்கள் அனைத்தும் இன்று காலை முதல் அடைக்கப்பட்டுள்ளன; இன்று மாலை 6 மணிக்கு பிறகே கடைகள் திறக்கப்படும்.

இதுதவிர வியாபாரிகள் சங்கம் சார்பில் பிபின் ராவத் உள்ளிட்டோரின் வீரமரணத்திற்கு ஊர்வலகமாகச் சென்று அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்ட கடைப்பகுதிகள், வெறிச்சோடியுள்ளன.

Updated On: 10 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  2. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  3. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  4. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  7. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  8. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்