/* */

கூடலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி ஓடக் கொல்லி பகுதியில் வீட்டை சூறையாடிய விநாயகன் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்.

HIGHLIGHTS

கூடலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை
X

காட்டு யானையால் சேதமடைந்த வீடு. 

சமீபகாலமாக கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் விநாயகன் என்ற காட்டு யானை அடிக்கடி குடியிருப்புகளையும், விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பதால், வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனத்துறையினர் யானையை விரட்டினாலும் மீண்டும் கிராம பகுதியை நோக்கி யானை நாள்தோறும் உலா வருகிறது. இந்நிலையில் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட ஓடக் கொல்லி பகுதியில் லீலா என்பவரது வீட்டை யானை சூறையாடியது. மேலும் விளைநிலங்களையும் சேதப்படுத்தியது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

விநாயகன் என்ற காட்டு யானை அடிக்கடி கிராமப்பகுதியில் உலா வருவதால் நாள்தோறும் உயிர்போகும் அச்சத்தோடு இருந்து வரும் கிராம மக்கள் யானையை அடர் வனத்தில் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 19 Oct 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...