/* */

வில்லங்கம் செய்யும் 'விநாயகன்' - விரட்டுவதற்கு கும்கி யானை வரவழைப்பு

கூடலூர் அருகே அட்டகாசம் செய்து வரும் காட்டு யானை விநாயகனை விரட்ட, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, ஓடக்கொல்லி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக, விநாயகன் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. குடியிருப்புகளையும் விளைநிலங்களையும் யானை சேதப்படுத்தி வருவதால், மக்கள் மிகுந்த அச்சம் அடைந்து வருகின்றனர்.

நேற்றிரவும் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டுயானை, விளைநிலங்களை சேதப்படுத்தியது. இது குறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. முதுமலை யானைகள் முகாமில் இருந்து சங்கர் மற்றும் கிருஷ்ணா என்ற இரு யானைகள், காட்டு யானை விநாயகனை விரட்டும் பணியில் களமிறங்கியுள்ளன. அவற்றுடன், 20க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 22 Oct 2021 7:41 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!