/* */

கூடலூர் அருகே புலி தாக்கி பசு மாடு பலி: கிராம மக்கள் பீதி

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில், பசு மாட்டை தாக்கி கொன்ற புலியால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

HIGHLIGHTS

கூடலூர் அருகே புலி தாக்கி பசு மாடு பலி: கிராம மக்கள் பீதி
X

கூடலூர் அருகே, புலியால் தாக்கப்பட்டு இறந்த பசுமாடு.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில், கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இருந்து வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும், சுமார் 6 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை, புலி அடித்துக் கொன்றுள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் அதோபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

அம்பாலா பகுதியில் உள்ள கொட்டகையில் கட்டியிருந்த பசு மாட்டை, புலி தாக்கி கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தோடு இருந்து வருகின்றனர். ஏற்கனவே இதுபற்றி வனத்துறை அமைச்சரிடம் முறையிட்டும், வனத்துறை அமைச்சர் அதற்கென தனி குழு அமைக்கப்பட்டு புலியை கூண்டு வைத்து பிடிக்கப்படும் என்று, கூறியிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் இந்த பகுதியில் புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், வெளியே சென்றுவர அச்சம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ள கிராம மக்கள், தாமதமின்றி வனத்துறையினர் கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 18 Sep 2021 5:36 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!