/* */

ஏரியில் மண் அள்ளிய 4 பேர் கைது: பொக்லைன், டிராக்டர் பறிமுதல்

சேந்தமங்கலம் அருகே, அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஏரியில் மண் அள்ளிய 4 பேர் கைது: பொக்லைன், டிராக்டர் பறிமுதல்
X

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரம் ஏரியில் சம்பவத்தன்று இரவு, அனுமதியின்றி, பொக்லைன், டிராக்டர் இயந்திரங்கள் மூலம் சிலர் மண் அள்ளுவதாக பவித்திரம் விஏஓவுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அப்போது பவித்திரம் ஏரியில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் 3 டிராக்டர்களில் மண் அள்ளியதை கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு மண் அள்ளிக் கொண்டிருந்த டிரைவர்கள் பவித்திரம் புதூர் நவலடிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் ( 35), துரைசாமி (50), பிரபாகரன் (25), திருச்சி மாவட்டம் வாழசிராமணியை சேர்ந்த பிரபு (31) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் மண் அள்ள பயன்படுத்திய ஒரு பொக்லைன் எந்திரம் மற்றும் 3 டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களின் உரிமையாளர் பன்னீர்செல்வத்தை தேடி வருகின்றனர்.

Updated On: 23 July 2021 2:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்