/* */

மாரடைப்பால் விவசாயி பலி: அதிகாரிகள் மீது போலீசில் புகார்

சேந்தமங்கலம் அருகே விவசாயி இறப்புக்கு மன உளைச்சலே காரணம், லால் விவசாயி உயிரிழந்தார். அதற்கு காரனமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

HIGHLIGHTS

மாரடைப்பால் விவசாயி பலி: அதிகாரிகள் மீது  போலீசில் புகார்
X

சேந்தமங்கலம் அருகில் அடுத்துள்ள சிவியாம்பாளையம், குடித் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (53) விவசாயி. இவரது மனைவி லோகாம்பாள் (42). இவர்களுக்கு சோபிகா என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று காலை, சுப்பிரமணிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை லோகாம்பாள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். மாலை 3 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து லோகாம்பாள் சேந்தமங்கலம் போலீஸ்சில் புகார் அளித்திருந்தார். அதில், எங்களது விவசாய நிலம் அருகே நீர் ஓடை புறம்போக்கு உள்ளது. அதனை பஞ்சாயத்து நிர்வாகத்தினர், ஒருதலைபட்சமாக அளவீடு செய்ததால் எனது கணவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. அதனால் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்ட அவர், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அவரது சாவுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

சேந்தமங்கலம் போலீஸ் எஸ்.ஐ சந்திரன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியத்தின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 July 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!