/* */

எருமப்பட்டி அருகே பெற்றோர் கண்டிப்பு; மனமுடைந்த தொழிலாளி தற்கொலை

எருமப்பட்டி அருகே பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

எருமப்பட்டி அருகே பெற்றோர் கண்டிப்பு;  மனமுடைந்த தொழிலாளி தற்கொலை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள காவக்காரப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் துரைசாமி(20), கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த துரைசாமி சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிக்கிடந்தார். இதைக்கண்ட அவரது பெற்றோர், அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரைசாமி உயிரிழந்தார்.

இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Aug 2021 4:15 AM GMT

Related News