/* */

ராசிபுரத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக பூமி தினத்தை முன்னிட்டு, ராசிபுரத்தில் மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

ராசிபுரத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

ராசிபுரத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

உலக பூமி தினத்தை முன்னிட்டு, ராசிபுரத்தில் மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராசிபுரம் பகுதியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு, சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக பூமி தினமான விழா நடைபெற்றது. மண் காப்போம் என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. ராசிபுரம் ஈஷா தன்னார்வ தொண்டர்கள், திருவள்ளுவர் அரசு கல்லூரி என்சிசி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மண் வளம் பாதுகாப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திருவள்ளுவர் அரசுக் கல்லூரி என்சிசி அலுவலர் சிவக்குமார் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மண் வளப் பாதுகாப்பு குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராசிபுரம் ஈஷா மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜா, மற்றும் அன்பழகன், தங்கராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 22 April 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!