/* */

இராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

இராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டு ரூ.32 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

இராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
X

இராசிபுரம் தீயணைப்பு நிலையம்

இராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க, அரசு விதிமுறைகளுடன் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. பட்டாசு கடைகள் அமைக்க தீயணைப்பு துறையினரிடம் பாதுகாப்பு குறித்த தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

இதனையடுத்து பட்டாசு கடைகள் வைக்க ராசிபுரம் தீயணைப்பு துறை அலுவலர்கள் லஞ்சம் கேட்டதாக புகார்கள் கூறப்பட்டது. இது குறித்து புகாரின் அடிப்படையில் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி., ராமசந்திரன், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் 5 பேர் கொண்ட தனி படையினர் திடீரென ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் சோதனை நடத்தினர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் கரிகாலன், உதவி அலுவலர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தீயணைப்பு நிலையத்தில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரொக்கம் சுமார் ரூ.32 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் சுமார் ரூ.2.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குறிப்பு எழுதப்பட்டிருந்த நோட்டும் கைப்பற்றப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!