Begin typing your search above and press return to search.
பரமத்திவேலூர் அருகே டூவீலர் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
பரமத்தி வேலூர் அருகே டூ வீலர் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (45). இவர் கடந்த 10 ஆண்டுகளாக பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் சிமெண்டு குழாய்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 1-ந் தேதி இவர் தனது டூ வீலரில் பொத்தனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். விநாயகர் கோயில் அருகே, அவருக்கு முன்னாள் மோட்டார் சைக்களில் சென்றவர், திடீரென பிரேக் போட்டதால், சங்கர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம்பட்டு, சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியல் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் உயிரிழந்தார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.