/* */

பரமத்திவேலூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர் இருவர் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் இருவர் பலியாகினர். படகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

HIGHLIGHTS

பரமத்திவேலூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர் இருவர் பலி
X

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் மதுரை வீரன் கோவில் தெருவில் வசித்து வரும் கயல்விழிக்கு என்பவருக்கு சொந்தமான பழைய வீட்டை புதுப்பிக்கும் நடைபெற்றது. இந்த பணியில் 3 கட்டிட மேஸ்திரி, 3 தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது ஹலோ பிரிக்ஸ் கல்லால் 6 அடி உயரத்திற்கு மேல் கட்டப்பட்டு இருந்த சுவரின் மேல் சிலாப் அமைக்கப்பட்டிருந்தது. அதன் பாரம் தாங்காமல் சுவர் இடிந்து விழுந்தது. இதில் கட்டுமான பணியாளர்கள் 6 பேர் சிக்கிக்கொண்டனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து கட்டிட இடிப்பாட்டிற்குள் சிக்கிக்கொண்ட 6 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாதேஸ்வரன் (50), அஞ்சலையம்மாள் (65 ) ஆகிய இருவரும் இறந்தனர்..

படுகாயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து. வருகின்றனர் வீடு கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த இச்சம்பவம் பொத்தனூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 31 March 2021 3:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்