/* */

நாமக்கல் அருகே பிளஸ் 2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

நாமக்கல் அருகே பிளஸ் 2 மாணவியைக் கடத்திய வாலிபரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே பிளஸ் 2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
X

கோப்பு படம்

நாமக்கல் அருகே உள்ள காவேட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பரணிசெல்வன் (21). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, சேலத்தில் தங்கி பிளஸ் 2 படித்து வரும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம் 30-ஆம் தேதி காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தனர் அதில், காவேட்டிப்பட்டியைச் சேர்ந்த பரணிதரன் தனது மகளை கடத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தனர். இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, நாமக்கல் பஸ் நிலையம் பகுதியில் இருந்த மாணவியை போலீசார் மீட்டு, விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவியைக் கடத்திய பரணி செல்வன் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

Updated On: 26 Oct 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  3. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...