Begin typing your search above and press return to search.
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
நாமக்கல் அருகே டூ வீலரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி (54). இவர் மேட்டுப்பட்டி அருகே உள்ள கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை வேலை முடிந்து திருப்பதி தனது டூ வீலரில் நாமக்கல்-திருச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு திருப்பத்தில் அவரது டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த திருப்பதி பலத்த காயம் அடைந்தார். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.