/* */

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

நாமக்கல் அருகே டூ வீலரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி (54). இவர் மேட்டுப்பட்டி அருகே உள்ள கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை வேலை முடிந்து திருப்பதி தனது டூ வீலரில் நாமக்கல்-திருச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு திருப்பத்தில் அவரது டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த திருப்பதி பலத்த காயம் அடைந்தார். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Feb 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்