/* */

நாமக்கல் அருகே அடகு வைத்த நகைகளை மீட்க முடியாத விரக்தி: பெண் தற்கொலை

அடகு வைத்த நகையை மீட்க முடியாதென்ற விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே அடகு வைத்த நகைகளை மீட்க முடியாத விரக்தி: பெண் தற்கொலை
X

நாமக்கல்:

நாமக்கல் அருகே அடகு வைத்த நகைகளை மீட்க முடியாக விரக்தியால் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல் அடுத்துள்ள சாலப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). டூ வீலர் மெக்கானிக் . இவரது மனைவி அங்கம்மாள் (39). இந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை, வட்டிக்கு கொடுத்து வந்தனர். அங்கம்மாள் தனது 15 பவுன் தங்க நகையை பேங்கில் அடகு வைத்து கடன் வாங்கியுள்ளார்.

அந்த கடனை அடைத்து நகையை திருப்பி பெற முடியவில்லை. இதற்காக வட்டிக்கு கடன் கொடுத்தவர்களிடம் பணத்தை திரும்பக்கேட்டுள்ளார். கடன் பெற்றவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் நகையை திருப்ப முடியாமல் போய் விடுமோ என்ற விரக்தியில் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அங்கம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 April 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்