குடும்பப் பிரச்சினையால் பெண் தீக்குளித்து உயிரிழப்பு
நாமக்கல்லில் குடும்பப்பிரச்சனை காரணமாக பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
நாமக்கல், கொண்டிசெட்டிப்பட்டி கணபதி நகரை சேர்ந்தவர் குமரவேல். இவருடைய மனைவி சுகன்யா (31). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குமரவேல் மது குடிக்கும் பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. கடந்த 15-ந் தேதி குமரவேல் மது குடித்து விட்டு, வீட்டுக்கு சென்றார். அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் விரக்தியடைந்த சுகன்யா வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியல் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுகன்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து சுகன்யாவின் தந்தை மணி (55) புகாரின் பேரில், நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.