/* */

நாமக்கல்லில் வரும் 1ம் தேதி காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஏலம்

நாமக்கல் நகரில் போலீஸ் துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள், வரும் ஜூன் 1ம் தேதி, ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வரும் 1ம் தேதி காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஏலம்
X

பைல் படம்.

நாமக்கல் நகரில் போலீஸ் துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள், வரும் ஜூன் 1ம் தேதி, ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து மாவட்டபோலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட பழைய வாகனங்கள் வருகிற ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 7 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 16 டூ வீலர்கள் உள்ளிட்ட 23 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன.

வாங்க விருப்பமுள்ளவர்கள் ஜூன் 1ம் தேதி காலை 9.45 மணிக்கு முன்னதாக, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ரூ.5 ஆயிரம் முன் பணம் செலுத்தி ஏலத்தில் கலந்துகொள்ளலாம். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும். ஏலம் எடுத்தவுடன் முழு பணத்தையும், ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்துகொள்ள ஆதார் அல்லது டிரைவிங் லைசென்ஸ் 2 நகல் எடுத்துவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 May 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?