/* */

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலின் உண்டியல் காணிக்கை ரூ.48.40 லட்சம்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கை ரூ.48,40,000 கணக்கீடு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலின் உண்டியல்  காணிக்கை ரூ.48.40 லட்சம்
X

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சயேயர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்கள் மூலம் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

நாமக்கல் நகரில் புராண சிறப்பு பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினசரி இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவற்காக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை 3 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்படும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உண்டியல் திறக்கப்பட்டபோது ரூ.28,92,819 ரொக்கம் காணிக்கையாக பெறப்பட்டது. தற்போது, கோவில் செயல் அலுவலர் (பொ) ஜான்சிராணி, ஈரோடு உதவி ஆணையாளர் அன்னக்கொடி, கண்காணிப்பாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் மூலம் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

கோயில் உண்டியல்களில் மொத்தம் ரூ.48,40,246 ரொக்கப்பணம் மற்றும் 49.5 கிராம் தங்கம், 135 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டது.

Updated On: 25 Feb 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  3. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  4. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  5. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  6. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  7. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  8. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  9. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  10. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...