அணியாபுரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
அணியாபுரம் கிராமத்தில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
HIGHLIGHTS
மோகனூர் ஊராட்சி ஒன்றியம், அணியாபுரம் கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்கப்புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா தொற்று பரவலின்போது பொதுமக்களுக்கு வழங்கிய உதவிகள், 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா, சுதந்திரதின விழாவில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்சி, ஆறுகளில் தூர்வாரும் பணியை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்ச்சி போன்ற போட்டோக்கள் இடம் பெற்றிருந்தன.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் போட்டோக்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. திரளான பொதுமக்கள் இக்கண்காட்சியினை பார்வையிட்டு, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்துகொண்டனர்.