Begin typing your search above and press return to search.
பரமத்திவேலூரில் மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம்
பரமத்திவேலூரில் மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமில் டாக்டர்கள் சிவகாமி, சித்ரா மற்றும் செல்வமணி ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர்.
இதில் பொதுமக்களுக்கு தொடுவர்மம், வர்ம சிகிச்சை, தொற்றா நோய் மற்றும் காய்ச்சல் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் சுமார் 157க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை பரமத்தி மற்றும் கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவத்துறையினர் செய்திருந்தனர்.