Begin typing your search above and press return to search.
தொடர்மழை: நாமக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், இரவு முதல் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் இன்று 3ம் தேதி ஒருநாள் மட்டும், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7 மணியுடன் முடிவுற்ற, 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்: நாமக்கல் டவுன் 26 மி.மீ, நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் 18 மி.மீ., எருமப்பட்டி 15 மி.மீ, குமாரபாளயைம் 8 மி.மீ, மங்களபுரம் 22.6 மி.மீ, மோகனூர் 14 மி.மீ, பரமத்திவேலூர் 10 மி.மீ, புதுச்சத்திரம் 26 மி.மீ, ராசிபுரம் 36.20 மி.மீ, சேந்தமங்கலம் 28 மி.மீ, திருச்செங்கோடு 14 மி.மீ, கொல்லிமலை செம்மேடு40 மி.மீ.