/* */

நாமக்கல் நகராட்சி கூட்டத்தில் சொத்து வரியை உடனே அமல்படுத்த தீர்மானம்

நாமக்கல் நகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வை உடனடியாக அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சி கூட்டத்தில் சொத்து வரியை உடனே அமல்படுத்த  தீர்மானம்
X

பைல் படம்

நாமக்கல் முனிசிபாலிட்டியின் மொத்த கடன் நிலுவை தொகை ரூ. 63.32 கோடி உள்ளது. எனவே சொத்து வரி உயர்வை உடனடியாக அமல்படுத்த நகராட்சி கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் நகராட்சி கூட்டம் அதன் தலைவர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் சுதா, துணைத் தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 39 வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பங்கேற்று தங்களுடைய கோரிக்கைகள் குறித்து பேசினர். இதையடுத்து தமிழக அரசு அறிவித்த கடன் நிலுவை செலுத்த வேண்டி உள்ளதால் சாத்துவரி உயர்வை உடனடியாக அமல்படுத்துவதற்கான தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதாவது 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீத சொத்துவரி உயர்வை அமல்படுத்தவும், 601 முதல் ஆயிரத்து 1,200 சதுரஅடி கட்டிடங்களுக்கு 50 சதவீத வரி உயர்வு, 1201 முதல் 1800 சதுர அடி கட்டிடங்களுக்கு 75 சதவீத வரி உயர்வு, 1800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்க ளுக்கு 100 சதவீதம் வரி உயர்வு அமல்படுத்த வேண்டும். நிலுவைத் தொகை ரூ. 1.76 கோடியை வசூல் செய்ய ஏற்படுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

வணிக பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு தற்போதைய சொத்து வரியில் இருந்து 100 சதவீதம் வரி உயர்வு செய்ய லாம்,தொழிற்சாலை, தனியார் பள்ளி, கல்லூரி கட்டிடங்களுக்கு 75 சதவீத சொத்து வரி உயர்வு மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. காலிமனை வரிவி திப்புக்கு ஒரு சதுர அடி நிலத்திற்கு தற் போதைய அடிப்படை மதிப்பில் இருந்து 100 சதவீதம் வரி உயர்த்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் நகராட்சிக்கு ரூ.63.32 கோடி கடன் நிலுவை: நாமக்கல் நகராட்சி நிர்வாக அலுவலகம் ரூ. 4.44 கோடி அளவில் கட்டப்பட்டுள்ளது. மேலும், பிற துறைகளுக்கு செலுத்த வேண்டியதொகை என்ற அடிப்படையில் ரூ.16.64 கோடி நிலுவை உள்ளது. திரும்ப செலுத்த வேண்டிய கடன் நிலுவை ரூ. 40.48 கோடி, நகராட்சி பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூக்கால பணப்பயன், ஓய்வூதியம், தற்போது பணி புரியும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சேமநல நிதி, நகராட்சியின் பங்கு தொகை மற்றும் பிற பணப்பயன்கள் என்ற வகை மொத்தக் கடன் தொகை நிலுவை ரூ. 63.32 கோடி உள்ளதாக நகராட்சி கமிஷனர் சுதா தெரிவித்தார்.

Updated On: 9 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...