விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை
விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல்லில் அகில இந்திய விஸ்வகர்மா பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய தலைவர் குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ரமேஷ், புதுச்சேரி மாநில தலைவர் நாகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ஜெகதீசன் வரவேற்றார்.
பொதுச்செயலாளர் மருதராஜ் கணேஷ், தேசிய பொருளாளர் சிவக்குமார், அகில இந்திய பாரதிய ஸ்வர்ணகர் சங்கம் காஷ்மீர் சிங் ராஜ்புட், சட்ட ஆலோசகர் மூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.
இந்தக் கூட்டத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையின்யின் படி விஸ்வகர்ம சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அறங்காவலர் குழுவில் விஸ்வகர்மா இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாநில துணைப்பொதுச்செயலாளர் மணி நன்றி கூறினார்.