/* */

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு முழுவதையும் அரவை செய்ய கோரிக்கை

விவசாயிகளின் கரும்பு முழுவதையும் அரவை செய்யும் வரை அரவையை நிறுத்தக் கூடாது என்று கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு முழுவதையும் அரவை செய்ய கோரிக்கை
X

பைல் படம்.

இது குறித்து மோகனூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் மணிவண்ணன், பொதுச்செயலாளர் மணிவேல் ஆகியோர், ஆலையின் நிர்வாக இயக்குனருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2021-22ம் ஆண்டிற்கான கரும்பு அரவைப்பருவம் நடந்து கொண்டுள்ளது. கடந்த மார்ச் 1ம் தேதி நிலவரப்படி ஆலைக்குப்பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து 38 ஆயிரம் டன் கரும்பு இன்னும் வெட்டி அரவை செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கரும்பு வெட்டுக்கூலி அதிகரித்து ஒரு டன்னுக்கு ரூ.1,400க்கு மேல் வழங்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் ஆலைக்கு பதிவு செய்துள்ள கரும்பில் 38 ஆயிரம் டன் வெட்டாமல் உள்ளது. தற்போது, ஆலையின் அரவையை நிறுத்தினால், கரும்பை வெளி ஆலைகளுக்கு அனுப்பிய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

வெளி ஆலைகளுக்கு கரும்பை அனுப்பினால் வெட்டுக்கூலி, லாரி வாடகை போன்றவை அதிகரிப்பதுடன், கரும்பு காய்ந்து மகசூல் குறையும் அபாயம் உள்ளது. வெளி ஆலைகளுக்கு கரும்பு அனுப்பும்போது, மோகனூர் ஆலைக்கும் நஷ்டம் ஏற்படும், விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படும். எனவே விவசாயிகளிடம் பதிவு செய்து நிலுவையில் உள்ள 38 ஆயிரம் டன் கரும்பு முழுவதையும் வெட்டி அரவை செய்யும் வரை ஆலையின் அரவைப் பருவத்தை நீட்டிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 7 March 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...