நாமக்கல்லில் 24ம் தேதி மரவள்ளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்தும் பயிற்சி
நாமக்கல்லில் வருகிற 24ம் தேதி, மரவள்ளி பயிரில் மாவூப்பூச்சியை கட்டுப்படுத்துதல் குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற 24ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு, மரவள்ளி பயிரில் ஒருங்கிணைந்த முறையில் மாவூப்பூச்சியை கட்டுப்படுத்துதல் என்ற தலைப்பில் ஒருநாள் இலவசப் பயிற்சிநடைபெறஉள்ளது. இப்பயிற்சியில் மரவள்ளி பயிர்களைத் தாக்கும் மாவூப் பூச்சிகள், அதனை புதிய ஒட்டுண்ணிகளைக் கொண்டு கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை முறையில் பூச்சிமற்றும் பூஞ்சாண எதிர் உயிர் கொல்லிகள் மூலம் ஒருங்கிணைந்த முறையில் மரவள்ளியில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்துதல் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்படும். இதில் விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று பயிற்சி மைய தலைவர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.